Friday 22 April 2022

உரிமை கோரப்படாத நிலையில் இரு சடலங்கள்..!!!

SHARE

உரிமை கோரப்படாத நிலையில் ஆண்கள் இருவரது சடலங்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் காத்திருப்பில் உள்ளாதாக தெரியவருகின்றது.

இவ் விடயம் குறித்து தெரிய வருவதாவது ,

16.02.2022 அன்று யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தலைமன்னாரைச் சேர்ந்த மணிவேல் (64 வயது) என்பவரும்

16.03.2022 அன்று பாசையூர் சென் அன்ரனீஸ் தேவாலயத்திற்கு அண்மையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்ப ட்ட 60 வயது மதிக்கத்தக்க. ஆணின் சடலம் உட்பட இரு சடலங்கள் உறவினர்களால் பொறுப்பேற்கப் படாத நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே உரியவர்கள் அடையாளப்படுத்தி சடலங்களை விரைவில் பொறுப்பேற்கும்படி யாழ்ப்பாணம் பொலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.தர்மினி
SHARE