Sunday 18 September 2022

ஹெரோயினின் பிடியில் யாழில் 20 கிராமங்கள்..!!!

SHARE

உயிர்க்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோயினைப் பயன்­ப­டுத்­திய 10 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதற்கு அடி­மை­யான 320 பேர் வரை­யில் யாழ்ப்பாணம் சிறைச்­சா­லை­யில் மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் ஹெரோயி­னுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கும் நிலை­யம் திறக்­கப்­பட்டு, இரண்டு மாதங்­க­ளுக்­குள் 134பேர் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேலும், யாழ். மாவட்­டத்­தில் 20 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த பல­ரும் ஹெரோயின் பாவ­னைக்கு முற்­றாக அடி­மை­யா­கி­யுள்­ள­னர் என்ற அதிர்ச்சித் தக­வ­லும் வெளி­வந்­துள்­ளது. ஹெரோயி­னுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளில் அதி­க­மா­னோர் 18 – 23 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்­ப­து­டன், யாழ். நக­ரி­லுள்ள பிர­பல பாட­சா­லை­க­ளின் மாண­வர்­க­ளும் இதற்­குப் பழக்­கப்­பட்­டுள்­ள­னர் என்ற உண்­மை­யும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

கொரோனா, பொரு­ளா­தார நெருக்­கடி எனப் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் யாழ். குடா­நாட்­டில் உயிர்க்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோயின் பயன்­பாடு பல்­கிப் பெரு­கி­யுள்­ளது.

கொழும்­பி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக உயிர்க்­கொல்­லி ஹெரோயின் யாழ்ப்­பா­ணத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றது. இங்­குள்ள பல நூற்­றுக்­க­ணக்­கான முக­வர்­கள் ஊடாக அவை குடா­நாட்­டின் சகல பகு­தி­க­ளுக்­கும் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன.

உயிர்­கொல்லி ஹெரோயினை ஊசி மூலமே அதி­க­ள­வா­னோர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்­கம் 300 மில்லி கிராம் வரை­யில் நுகர்­கின்­ற­னர்.

18 – 23 வய­துக்­கும் இடைப்­பட்ட இளை­ஞர்­களே உயிர்க்­கொல்­லி போதைப் பொரு­ளான ஹெரோயினை அதி­க­ள­வில் நுகர்­கின்­ற­னர். இத­னைத் தவிர பாட­சாலை மாண­வர்­க­ளும் நுகர்­கின்­ற­னர். ஹெரோயின் நுக­ரும் பெரும்­பா­லான இளை­ஞர்­க­ளின் பெற்­றோர் இது தொடர்­பில் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்து தாமே தமது பிள்­ளை­களை பொலி­ஸில் ஒப்­ப­டைக்­கின்ற சம்­ப­வங்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன. சில பெற்­றோர் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

‘எவ்­வ­ளவு காலம் சென்­றா­லும் பர­வா­யில்லை. இவனை நீங்­கள் வைச்­சி­ருங்கோ. வெளி­யில விட்­டால் பெரிய பிரச்­சினை’ என்று தெரி­வித்து தாய் ஒரு­வர் அண்­மை­யில் தனது மகனை மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைத்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் ஹெரோயின் பாவ­னைக்கு அடி­மை­யான சுமார் 320 பேர் வரை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். உயிர்­கொல்லி ஹெரோயி­னுக்கு அடி­மை­யா­ன­மை­யால் பல்­வேறு குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்டு கைதா­ன­வர்­க­ளும் இதற்­குள் உள்­ள­டங்­கு­கின்­ற­னர்.

உயிர்க்­கொல்­லி போதை­யான ஹெரோயின் பாவ­னைக்கு அடி­மை­யா­ன­வர்­கள் தொடர்ந்­தும் யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­வ­தால், யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் விசேட சிகிச்­சைப் பிரிவு இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு இது­வரை 134 பேர் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

யாழ். மாவட்­டத்­தில் சுமார் 20 கிரா­மங்­கள் ஹெரோயின் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளின் கூடா­ர­மாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. இந்­தக் கிரா­மங்­க­ளி­லுள்ள இளை­ஞர்­க­ளில் அநே­கர் இத­னைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­மை­யும் பல்­வேறு தரப்­புக்­கள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

தொடர்ச்­சி­யாக யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­லும் இந்­தப் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முறை­யான வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சி­யல் தலை­வர்­கள், மதத் தலை­வர்­கள், சிவில் சமூ­கத்­தி­னர் முன்­வ­ர­வேண்­டும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.


SHARE