Friday 9 September 2022

மாதகலில் மரம் வெட்ட முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மரத்தின் கிளைகளை வெட்ட ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மாதகல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மரத்தில் ஏறி கிளைகளை வெட்ட முற்பட்ட வேளையில் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE